100 யூனிட் தாண்டினால் மின் கட்டணம் உயர்வு1381862680

100 யூனிட் தாண்டினால் மின் கட்டணம் உயர்வு
பெங்களூரு,-'கர்நாடகாவில் இன்று முதல் 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் மின் கட்டணத்துடன், 31 ரூபாய் செலுத்த வேண்டும்' என கர்நாடக மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் நிலக்கரி விலை உயர்வு, கொரோனா போன்ற காரணங்களால் பெஸ்காம் உட்பட ஐந்து மின் வினியோக நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளாக, நஷ்டத்தை சந்தித்து வந்தன. இதை சரிக்கட்ட, மின் வினியோக நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்தி கொள்ள, கர்நாடக மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி கேட்டது.இதன்படி ஏப்ரல் 1ல் யூனிட்டுக்கு ஐந்து பைசா உயர்த்தப்பட்டது. மீண்டும் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என செய்திகள் வெளியானது. ஆனால் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இன்று முதல் மின் கட்டணம் தற்காலிகமாக உயர்த்தப்படுகிறது. தற்போது 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள், மின் கட்டணத்துடன் கூடுதலாக 19 ரூபாய் செலுத்தினர். இனிமேல் மின் கட்டணத்துடன், 31 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த மின் கட்டண உயர்வு, டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும்.'மின் வினியோக நிறுவனங்கள் சீரான நிலைக்கு வந்தவுடன், கட்டண உயர்வு ரத்து செய்யப்படும்' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment