மநீம கட்சியின் இணை செயலாளர் நீக்கம்!


மநீம கட்சியின் இணை செயலாளர் நீக்கம்!


மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இணை செயலாளராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் பாபு.தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மநீம நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது. கட்சியின் மாநில இணை செயலாளர் சுரேஷ் பாபு கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன், மாநில இணை செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.சுரேஷ் பாபுவுடன்  கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் கட்சி ரீதியான எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என கூறப்பட்டுள்ளது. மநீமவில் இருந்து நீக்கப்பட்ட சுரேஷ் பாபு, நேற்று அதிமுகவில் சேர்ந்தார்.

Comments

Popular posts from this blog